மார்க்ஸ் – நம் மண்ணில்

உலகம்

நோய்வாய்ப்பட்டிருக்கும்

இந்த நேரத்தில்

உலகத் தொழிலாளர்களே

ஒன்று சேருங்கள்

என்று

வாஞ்சையோடு அழைத்த

மார்க்சின் குரல்

தேவையாக இருக்கிறது

போர்களால் உலகம் சிதைக்கப்பட்டுக்

கொண்டிருக்கும் காலத்தில்

ஆயுதங்களுக்கு அவசியமில்லாத

சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்திய

மார்க்சின் சிந்தனை

தேவையாக இருக்கிறது

இந்த உலகத்தில்

மாபெரும் மாற்றங்களுக்கும்

மகத்தான புரட்சிகளுக்கும்

தொடக்கமாக இருந்த

மாமேதை மார்க்சின்

சிலை

இந்தமண்ணிலும்

மாற்றங்கள் நிகழக்

காரணமாக

அமைய வேண்டும்

என்பதே

விருப்பமாக இருக்கிறது

ஆன போதிலும்

சிலையிலிருந்து

சிந்தனைக்கும்

சிந்தனையிலிருந்து

செயலுக்கும்

செல்வீர்கள் என்றால்

தோழர்களே

உங்களை

இறுக

அணைத்துக் கொள்வேன்!

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment