நெருடா பிறந்தநாள்

லகெங்கும் 

பயணம் செய்துவிட்டு

பூமியின் தோல்

எங்கெங்கும்

ஒரேமாதிரி இருக்கிறது

என்று சொன்ன

மகத்தான கவிஞன்

பாப்லோ நெருடாவின்

பிறந்த தினம் இன்று

புரட்சிக்காரர்களை

நேசித்த கவிஞன்

புரட்சிக்காரர்களால்

நேசிக்கப்பட்ட கவிஞன்

நான் 

எழுதத் தொடங்கியபோது

தன்னுடைய 

காதல் கவிதைகளாலும்

புரட்சிகரக் கவிதைகளாலும்

என்னை முழுவதுமாக

நிறைத்திருந்த

ஏகாதிபத்தியத்தை

எதிர்த்துநின்ற

அந்த மானுடக் கவிஞனை

நெஞ்செல்லாம் 

நிறைத்துக் கொள்கிறேன்!

 

ஜோசப் ராஜா

12.07.2025

 

 

Related Articles

Leave a Comment